குளிக்கும் போது இதை செய்ய மாட்டேன்…! வெளிப்படையாக கூறிய சீரியல் நடிகை பவித்ரா ஜனனி…!

பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜனனி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில், தன்னுடைய அன்றாட வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, சிறு வயது முதல் ஒரு விஷயத்தின் மீது பயத்துடன் இருந்தேன் என கூறியுள்ளார். என்ன விஷயத்தை கண்டு பயப்படுகிறார் பவித்ரா ஜனனி என்று பார்க்கலாம் வாங்க.நடிகை பவித்ரா ஜனனி தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார் அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் ஒதுங்கினார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சீரியலில் காலடி எடுத்து வைத்த இவர் அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் உள்ளிட்ட சீர்களில் நடித்திருக்கிறார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரியலில் நடித்து வரும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர் எனக்கு சிறு வயது முதலே கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்கள் சோப்புகள் என்றாலே எனக்கு பயம். அதனால் ஏதேனும் பக்க விளைவுகள் வந்து விடுமோ..? முகம் கருத்து விடுமோ..? ஏதேனும் வரக்கூடாது வந்துவிடுமோ.. உள்ளிட்ட பயம் இருந்து கொண்டே இருக்கிறது.இதனால் அதிகமாக வேதிப்பொருட்கள் கலந்த பொருட்களை நான் பயன்படுத்த செய்ய மாட்டேன். குளிக்கும் போது கூட கடலை பருப்பு, பச்சை பயிறு உள்ளிட்ட பவுடர்களை தான் உபயோகித்து குளிப்பேன் என பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *