அதை செய்யும் போது என் உயிர் போயிடுச்சு…! நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய அதிர்ச்சித் தகவல்…! வைரலாகும் வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!

தென்னிந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் நடிகை தான் ராஷ்மிகா மந்தனா.பான் இந்திய நடிகையாக இருக்கும் இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் தமிழில் இறுதியாக விஜய் நடிப்பில வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு பாலிவூட்டில் இவருக்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்து விட்டதால் நடிப்பில் பாலிவூட்டில் கவனம் செலுத்தி வருகின்றார்.அமிதாப் பச்சனின் குட் பை படத்தின் மூலம் அங்கே அறிமுகமானவர் தற்போது ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் அனிமல் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இயக்குநர் சந்தீப் வாங்க ரெட்டி தான் அந்த படத்தை இயக்கி வருகின்றார்.இது தவிர அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு இரண்டு படங்களும் வெளியானால், ராஷ்மிகா மந்தனாவின் ரேஞ்சே மாறிடும் என்கின்றனர். ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில்

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக ஏகப்பட்ட ஸ்ட்ராங்கான கிசுகிசுக்கள் வலம் வருகின்றன.இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையான வொர்க்கவுட் ஒன்றை செய்யும் வீடியோவை ஷேர் செய்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, “This is a video @junaid.shaikh88 has captured- where my soul is leaving my body and coming back..” என கேப்ஷன் போட்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *