50 வயதில் அம்மா வாங்கிய விருது…! ஐஸ்வர்யா ராயை ஓடிவந்து கட்டிப்பிடித்த மகள்…! வைரலாகும் புகைப்படம் …!

சைமா விருது நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரத்யாவுடன் கலந்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது. நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ஐஸ்வர்யா ராய், 50 வயதிலும் சினிமாவில் கலக்கி வருகின்றார். இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்ததுடன், இந்த தம்பதிகளுக்கு ஆரத்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் மிகச்சிறந்த படங்கள் மற்றும் மிகச்சிறந்த கலைஞர்களை கொண்டாடும் விதமாக வருடம்தோறும் நடத்தப்படும்.

சைமா விருது கடந்த ஞாயிற்றுக்கிழமை துயாயில் நடைபெற்றுள்ளது.இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகச்சிறந்த திரைப்படம் என விருது பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் சிறந்த நடிகராகவும், அன்னபூரணி படத்திற்கு

நடிகை நயன்தாரா தெரிவு செய்யப்பட்டு விருது பெற்றனர்.விமர்சகர்களின் தேர்வின்படி சிறந்த நடிகையாக ஐஸ்வர்யாராய் தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றுக்கொண்டார். இதில் தனது மகளுடன் கலந்து கொண்டார்.50 வயதில் தனது தாய் விருது வாங்குவதை அவதானித்த மகள் ஓடிவந்த அவரைக் கட்டிப்பிடித்து தனது அன்பை பறுமாறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *