குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் நடிகர் சிம்பு.தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. தற்போது இவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிமிஸ் தயாரிக்கிறது. இப்படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சிம்பு மனதுக்கு பிடித்தவருடன் morisas நாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் சிம்பு யாருடன் சென்று இருப்பார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 2021 -ம் ஆண்டு வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இப்படத்திற்காக இவருக்கு ரூ.9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டது.
ஆனால் ஒப்புக் கொள்ளப்பட்டபடி சிம்பு படத்தில் நடிக்க தயாராக இல்லை.இதனால் வேல்ஸ் நிறுவனம் சிம்பு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.தற்போது இந்த வழக்கு நடைபெற்றும் வரும் நிலையில் சிம்பு இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மனதிற்கு பிடித்த நபருடன் morisas என்ற நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.