தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்த நடிகை மயூரி குறித்த தகவலை சங்கீதா சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகை மயூரிபாண்டியராஜனின் கும்பகோணம் கோபாலு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மயூரி. தொடர்ந்து விசில், மன்மதன், ஏய், கனா கண்டேன் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களிலும் நடித்த இவர் கடந்த 2005ம் ஆண்டு தனது 22 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை சங்கீதா மயூரியுடன் மலையாளத்தில் சமர் இன் பெத்லகேம் என்ற படத்தில் நடித்த நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்றில் மயூரி குறித்து பேசியுள்ளார்.இவர் கூறுகையில், திரைப்படங்களில் காண்பதும், நிஜ வாழ்வில் காணப்படுவதும் வெவ்வேறானவை… வளைந்து கொடுப்பவர்களால் மட்டுமே இரண்டையும் கையாள முடியும் என்று கூறியுள்ளார்.
ரஷ்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்திருப்பவர் மயூரி காயத்ரி.இவருக்கும் இவரது நீண்ட நாள் நண்பர் அருணுக்கும் இன்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ திருமலை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஷ்வரா சுவாமி கோயிலில் திருமணம் நடந்தது. கொரோனா கட்டுப் பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு இந்த திருமணம் நடந்தது. இது பற்றி மயூரி தனது இணைய தள பக்கத்தில், ஆம் எனக்குத் திருமணம் முடிந்தது. எனது 10 வருட நட்பு இன்று அர்த்தமுடையதானது என்றார். .