நடிகை த்ரிஷா ( Trisha ) தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர். சூர்யா, ஆர்யா, சிம்பு, தனுஷ், விக்ரம், கமல், விஜய், அஜித், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்ட பெருமை இவருக்கு உண்டு. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஹீரோயினாக வலம் வந்தவர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் த்ரிஷா போதைக்கு அடிமையாக வேண்டாம் என்று கூறியதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளுக்கு போதைப் பழக்கம் இருப்பது ஒன்றும் புதிதல்ல என கோலிவுட் வட்டாரங்களில் தவறாக புரிந்து கொண்டு பேச ஆரம்பித்துவிட்டனர். ஆனால் திரிஷா கூறியது, இந்த மாதிரி ஊரடங்கு சமயத்தில் டிஜிட்டல் பிளாட்பார்ம் ஒரு போதை எனவும், முடிந்தவரை அதில் சிக்கிக் கொள்ளாமல் தங்களுடைய எண்ணங்களை வேறு வேலைகளுக்கு மாற்றுமாறு கூறியுள்ளார்.

திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து ராங்கி, கர்ஜனை, பரமபதம், சதுரங்க வேட்டை 2 போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் சில படங்கள் OTTயில் வெளி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். சமீபத்தில் திரிஷா தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்ற பிரச்சனையில் சிக்கி அதிலிருந்து விடுபட வெளிநாட்டுக்கு ஓடிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் இவரது முன்னாள் காதலன் பாகுபலி ராணா-வின் திருமணம் நடைபெற்ற போது அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டிருக்க நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள், நண்பர்கள் மட்டும் தான் என்று சொல்லி வந்த த்ரிஷா வாயே திறக்காமல் இருந்தார்.

நண்பர் மட்டும் தான் என்றால் அவரது திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல வேண்டியது தானே என்று பலரும் கூறினார்கள். அப்போது, முன்னாள் காதலியை இந்நாள் தோழியாக “அந்த” உறவிற்காக அவளது உடலை மட்டுமே நேசிக்கும் மனநோயாளிகள் (narcissistic psychopath)” என்று ஒரு பதிவை வெளியிட்டு “இது எனக்கு தெரியும்” என கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது ராணாவுடன் மது போதையில் நெருக்கமாக இருக்கும் த்ரிஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *