2022 முதல் காலாண்டில் பண வரவை மூட்டை மூட்டையாக அள்ளப்போகும் 5 ராசிகள் யார் யார் தெரியுமா…?

பிப்ரவரி 4ம் திகதியில் இருந்து மகர ராசியில் புதன் மீண்டும் தனது நேர்மறையான பெயர்ச்சியைத் தொடங்கியுள்ளார். இப்படி புதன் பகவான் நேர்மறை நகர்வு, வக்ர பெயர்ச்சி நடந்து மீண்டும் நேர்மறை பெயர்ச்சி என 2022 ஆண்டின் முதல் காலாண்டு வரை நடக்கிறது. இந்த காலத்தில் எந்த ராசிகளுக்கெல்லாம் சுக போகங்கள், வசதிகள் அதிகரிக்கும், திறமையால் ஜொலிப்பார்கள் என்பதைப் பார்ப்போம்.


மேஷ ராசிக்கு வேலை, தொழில் மூலம் தன லாபமும், முன்னேற்றமும் ஏற்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமானதாக அமையும். கணக்கியல், ஊடகம், எழுத்துத் துறை மற்றும் வங்கித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் மிகவும் சாதகமானதாக இருக்கும்.


மகர ராசியில் புதன் சஞ்சரிப்பதும், பின்னர் வக்ர நிலை அடைவதால் ரிஷப ராசியினர் பல வழிகளில் சாதகமான பலன்களை அடைவீர்கள். இந்த காலம் சிறப்பான பலனைத் தருவதாக இருக்கும். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.


தனுசு ராசிக்கு 2ம் இடமான மகரத்தில் புதனின் சஞ்சாரம், வக்ர நிலை நிகழ்வதால் பல விதத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நீண்ட கால முதலீடுகள் செய்வது நல்லது. வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். கடந்த கால முதலீடுகள் உங்களுக்கு நல்ல பலன் திரும்பத் தருவதாக இருக்கும். பணப் பரிவர்த்தனை, வணிகம் போன்ற விஷயங்களுக்கு இந்த காலம் சிறப்பான பலனைத் தரும்.


மார்ச் 6ம் தேதி வரை மகரத்தில் ஏதேனும் ஒரு வகையில் புதன் பகவான் இருப்பதால் மிக முக்கிய காலமாக உங்களுக்கு இருக்கும். உங்களின் திறமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். நிதி நிலைமை சிறப்பானதாக இருக்கும். உங்களின் வணிகம், வேலையின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.


மீன ராசிக்கு புதன் மகர ராசியி சஞ்சரிப்பது சாதகமானதாகவும், இனிமையான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், ஒருவர் மீது ஒருவரின் அன்பும், அக்கறையும் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி சிறக்கும். நிதிநிலை மேம்படுத்துவதற்கான காலம். நீங்கள் எதைத் தொட்டாலும் அதில் நல்ல முன்னேற்றமும், லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *