2 முறை அபார்ஷன்…! அதை செய்ததால் தான் நான் உன்னுடன் இருப்பேன் …! மனம் நொந்து பேசிய நடிகை சங்கவி…!

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்த நடிகை சங்கவி பல வருடங்களுக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். 90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வந்த சங்கவி திருமணத்திற்கு பிறகு குழந்தை இல்லாமல் தான் பட்ட வேதனையை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதை பார்க்கலாம்.கர்நாடகாவை சேர்ந்த சங்கவி முதல் முதலாக தமிழில் அறிமுகமானது அமராவதி திரைப்படத்தில் தான். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் கதாநாயகியாக நடித்திருப்பார். முதல் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்த நிலையில் அடுத்ததாக நடிகர் விஜயுடன் ரசிகன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு, கோவை மாப்பிள்ளை என்ன அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்திருக்கிறார். அதோடு கோகுலத்தில் சீதை, சாவித்திரி, காலபைரவா என சில சீரியல்களிலும் நடித்திருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததாலேயே இவருக்கு திருமணம் செய்வதற்கு லேட்டாகி விட்டதாம்.

வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து நடிகை சங்கவி பேசியுள்ளார். நடிகை சங்கவி தமிழில் அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சங்கவி. அதைத் தொடர்ந்து நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு, கோவை மாப்பிள்ளை என்ன அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார். 2016ல் ஐடி நிபுணரான வெங்கடேஷை திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், முதல் முறை சங்கவி கர்ப்பம் ஆனதும் ஏழாவது வாரத்தில் இதயத்துடிப்பு நல்லா இருக்கு என்று சொன்ன மருத்துவர்கள் எட்டாவது வாரத்தில் இதயத்துடிப்பு இல்லை என்று அபார்ஷன் செய்ய வேண்டும் எனக் கூறினர்.

அந்த நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக சென்றதால் இப்படி ஆகிவிட்டதோ. 2 முறை அபார்ஷன் இந்த நேரத்தில் நாம வேலையை தவிர்த்து இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். இரண்டாவது முறை கருவுற்று இருந்த நிலையில் சங்கவி வீட்டில் இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்க கூட இல்லை ஆனால் அதுவும் தனக்கு தங்கவில்லை.அப்போது கணவர் தான் அதிகமான ஆறுதல் கொடுத்தார் எனத் தெரிவித்துள்ளார். சங்கவிக்கு 2020ல் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தையை அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *