“ஹோட்டலுக்கு அழைத்தார் நானும் போனேன்…!” ஆனால் தமிழ் இயக்குனர் மீது வித்யா பாலன் பாலியல் புகார்…!

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான டர்ட்டி பிக்சர்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ஓவர் நைட்டில் ஒபாமா ஆனவர் நடிகை வித்யா பாலன். நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகைகள் பலரும் நடிக்க அஞ்சினார்கள், தயங்கினார்கள். ஆனால் நடிகை வித்யா பாலன் அதனை நான் நடிக்கிறேன் என்று தைரியமாக ஏற்றுக்கொண்டு நடித்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஒரு நடிகை சம்மதம் தெரிவித்தார். சில்க் ஸ்மிதா வாழக்கை வரலாற்றில் ஒரு நடிகை நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

என்ற தகவலே இந்த படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாகவும், நடிகை வித்யா பாலன் புகழ் பரவவும் அடிப்படையாக அமைந்தது.இந்த படத்தின் ரிலீஸ் எதிர்நோக்கி காத்துக் கிடந்தனர் லட்சக்கணக்கான சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள். அவர்களின் எதிர்பார்ப்பை அப்படியே பூர்த்தி செய்தது டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படம். தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் அப்படி ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் இருந்த திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஒரே இரவில் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியின் காரணமாக நடிகை வித்யா பாலன் மிகப்பெரிய நடிகையாக உருவெடுத்தார். பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த சென்னையைச் சேர்ந்த தமிழ் இயக்குநர் ஒருவர் குறித்து கூறியுள்ளார். ஒரு விளம்பர படத்தில் நடிக்க வேண்டும் என என்னை தொடர்பு கொண்டார் அந்த இயக்குனர்.

சென்னையில் தன்னை நேரில் காண வேண்டும் என்று கூறியதை அடுத்து அவரை பார்க்கச் சென்று இருந்தேன்.மறுநாள், நான் இந்த ஹோட்டலில் இந்த அறையில் தங்கியுள்ளேன் என கூறி தன்னை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்னார். அப்போதே, தனக்கு சிறுது சந்தேகமாக இருந்தது. ஆனால், தனது வாழ்க்கையில் இதுவரை என்னை யாருமே படுக்கைக்கு அழைத்தது இல்லை என்பதால் அவரிடம் கொஞ்சம் உஷாராகவே இருக்க முடிவு செய்து சென்றேன்.இயக்குநரின் அறைக்கு சென்றேன். உள்ளே வாங்க என்று அழைத்தார். ஆனால், நான் கதை மூடாமல் திறந்தே வைத்திருந்தேன்.

அது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, கதவை திறந்து வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்ததால் அவரால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியவில்லை.எனக்கு இதில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்ட அவர் ஒரு கட்டத்தில் எழுந்து வெளியேறிவிட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த விளம்பர படத்திலிருந்து தான் நீக்கப்பட்டேன். அது எனக்கு மகிழ்ச்சி தான் என்றும் அவர் கூறியுள்ளார். பாலிவுட் திரை உலகை பொருத்தவரை எனக்கு படுக்கைக்கு அழைக்கும் சம்பவமே நடைபெறவில்லை என்பதால் அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி என்றும் கூறுகிறார் நடிகை வித்யா பாலன். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *