இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கையில் அதிக சம்பளம் வாங்கும் முன்னனி நடிகைகளின் வரிசைஇயில் முதல் இடத்தினை பிடித்து வந்தார். பின் திருமணமாகி குழந்தை பெற்ற பின் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவர்களுக்காக பிரைவேட் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராய்.. ஐஸ்வர்யாவின் தீவிர ரசிகராக இருந்ததால் அந்த பார்ட்டியில் நடனமாட சுமார் 10 கோடி அளவில் காசு வாங்கி அதிபரை குஷிப்படுத்தியுள்ளார்.மாடலிங் உலகில் கால் பதித்த நிலையில், ஆரம்பத்தில் வெறும் 1,500 சம்பளத்துடன் வேலை பார்த்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
ஆனால், தற்போது அவர் ஒரு விளம்பர படத்தில் நடித்தால் கூட பல கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளன.1997ம் ஆண்டு முதல் 2022 வரை 48 வயதிலும் லீடு ரோலில் நடித்து அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராய். தமிழ், இந்தி, வங்காளம் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு நாள் நடிக்க 6 முதல் 7 கோடி ரூபாயை சம்பளமாக விளம்பர படங்களுக்கு வாங்கி வருவதாகவும், திரைப்படங்களில் நடிக்க 10 முதல் 12 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும், ஆண்டுக்கு 80 முதல் 90 கோடி வரை அவர் சம்பாதித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.
அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை மணந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் மும்பையில் 112 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருகிறார். பாந்த்ராவில் 21 கோடி ரூபாய் மதிப்பில் ஐஸ்வர்யா ராய்க்கு தனி பங்களாகவே இருக்கிறதாம். மேலும், துபாயில் உள்ள ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்டில் அவருக்கு சொகுசு வில்லா ஒன்றும் இருக்கிறதாம். அதாவது இந்திய மதிப்பில் 766 கோடி ரூபாய் என்கின்றனர். இந்நிகழ்ச்சியில் யாருக்கும் தெரியாமல் நடத்தியதால் அங்கு எடுக்கபட்ட புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வருகிறது.