பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மலைகா அரோரா. பல படங்களில் நடித்து வந்த இவர், நடிகர் மற்றும் இயக்குனருமான அர்பாஸ் கானை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2016 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.இருவரும் இணைந்து பார்ட்டியில் கலந்துகொள்ளும் புகைப்படங்கள் கூட வெளிவந்துள்ளது. சமீபகாலமாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.இந்நிலையில் நடிகை மலைகா அரோரா, அர்ஜுன் கபூரின் உறவினர்களான குஷி கபூர், போனி கபூர், ஜான்வி கபூர், அனில் கபூர் ஆகியோரை இன்ஸ்டாகிராமில் Un Follow செய்துள்ளார்.ஆனால், தன்னுடைய காதலன் அர்ஜுன் கபூரை மட்டும் Follow செய்து வருகிறார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாற்றம் என்பது வாழ்க்கையின் சட்டம்.
கடந்த காலத்தையோ அல்லது நிகழ்காலத்தையோ மட்டும் பார்ப்பவர்கள் எதிர்காலத்தைத் தவறவிடுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவு அவர்கள் இருவரின் பிரிவை தான் குறிப்பிடுகிறது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அர்ஜுன் கபூரின் குடும்பத்தில் இவர்களுடைய காதலுக்கு ஓகே சொல்லவில்லை. அதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுபோல் பல காரணங்கள் இவர்களுடைய காதல் பிரிவுக்கு கூறுகிறார்கள். ஆனால், இதுவரை இந்த காதல் பிரிவு குறித்து மலைக்கா மற்றும் அர்ஜுன் இருவருமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மலைகா அரோரா போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருடன் லிவிங் டுகெதரில் இருந்து வருகிறார். சமீபத்தில் மலைகா அரோரா அர்ஜுன் கபூர் பிரிந்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியானது. இதன்பின் மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரின் அப்பா போனி கபூர், அவரின் சகோதரிகளான ஜான்வி, குஷி கபூர், அனில் கபூர் போன்றவர்களின் இன்ஸ்டா ஐடியை அன்ஃபாலோ செய்து கழட்டிவிட்ட அர்ஜுன் கபூருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அர்ஜுன் கபூருக்கு, மலைக்கா அரோராவை கரம்பிடிக்க கொடுக்க போனி கபூர் குடும்பம் விரும்பவில்லை என்றும் அர்ஜுன் கபூரை சந்திக்க கூட மலைக்காவை விடவில்லை என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.