வடிவேலு நல்ல மனிதர், ஆனால் அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன்…! காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் ஆவேசம்…! அவர் பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். இது சில சமயங்களில் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதே கிடையாது. இருப்பினும் இவரைப் பற்றி யாரும் தப்பாக விமர்சிப்பது கிடையாது. இந்நிலையில் காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் அஜித் பற்றி கூறியிருக்கும் ஒரு செய்தி பகீர் கிளப்பி இருக்கிறது. அதாவது பல வருடங்களாக வடிவேலு, அஜித் படத்தில் நடிப்பது கிடையாது. இதற்கு முக்கிய காரணம் வடிவேலுவின் துடுக்குத்தனமான பேச்சு அஜித்திற்கு பிடிக்கவில்லை என்பதுதான். இது குறித்த ஏராளமான செய்திகள் வெளி வந்திருக்கிறது.படங்களில் நடிப்பதை தாண்டி எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகளில் அஜித் கலந்து கொள்ளமாட்டார். அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். இவரின் குணங்களை கண்டு பல பிரபலங்கள் பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில் வடிவேலுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் டெலிபோன் ராஜ். தற்போது இவர் அஜித் வடிவேலு கிடையே நடந்த சண்டை பற்றி பேசியுள்ளார். அதில், ஒரு இடத்தில ஒன்றாக பணியாற்றும் போது, நண்பர்களாக பழகுவதில் என்ன தவறு இருக்கிறது. அப்படி தான் வடிவேலு அஜித்தின் பெயரை சொல்லி அழைத்துள்ளார். ஆனால் இதை அஜித் ஈகோவாக பார்த்துவிட்டார். வடிவேலுவை விட அஜித் குமார் சிறியவர். அப்படி இருக்கும்பட்சத்தில் அஜித்தை வடிவேலு பெயர் சொல்லி அழைத்ததில் எந்த ஒரு தவறு இல்லை.

நடிகர் அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன். அவர் செய்யும் உதவிகள் மற்றவருக்கு தெரிய வேண்டும் என்றும் எண்ணத்தில் தான் செய்வார் என்று டெலிபோன் ராஜ் கூறியுள்ளார்.சம வயது உடையவராக இருந்தாலும் வடிவேலு எந்த அளவுக்கு ஈகோ பிடித்தவர் என்பதை பல பிரபலங்கள் கூறியிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது வாய்ப்புக்காகவும், வைகை புயலை இம்ப்ரஸ் செய்வதற்காகவும் அவர் இவ்வாறு பேசியிருப்பது விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அஜித் பற்றி எதுவும் தெரியாமல் இப்படி கண்டபடி உளறி கொட்டும் இவரை தற்போது ரசிகர்கள் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *