லாரன்ஸ் படத்தில் நடித்த பிறகு என் வாழ்க்கை மோசமா ஆச்சி…! திருநங்கை பிரியா கண்ணீர் பேட்டி…!

லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து 2011 -ம் ஆண்டு காஞ்சனா படம் வெளியானது. இப்படத்தில் சரத்குமார், லக்ஷ்மி ராய், கோவை சரோலா, தேவதர்ஷினி எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருப்பார். இதில் திருநகையாக முக்கிய வேடத்தில் நடித்த சரத்குமாரின் மகளாக திருநங்கை பிரியா நடித்திருந்தார். இப்படத்தில் காஞ்சனாவாக சரத்குமாரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.திருநங்கை காஞ்சனாவின் மகளாக நடித்த பிரியா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், ” காஞ்சனா படத்தின் வெற்றிக்கு பிறகு நான் கோடியில் சம்பாரித்து இருப்பேன் என நினைப்பார்கள்,

ஆனால் அப்படி இல்லை, என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்றால் அது காஞ்சனா படத்தில் நடித்தது தான், அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாவது நான் சாதாரண திருநங்கை வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன், இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், காஞ்சனா படத்தில் நடித்து மிக பெரிய தவறை நான் செய்து விட்டேன். அந்த படத்தில் நடிப்பதற்கு முன்புஎன்னுடைய வாழ்க்கை சாதரணமாக போய்க்கொண்டு இருந்தது.

ஆனால் காஞ்சனா படத்தில் பின் பலரும் நான் கோடியில் சம்பாதித்து விட்டேன் என நினைக்கிறார்கள். அந்த படத்திற்கு பின் எனக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அந்த படத்தில் நடித்ததற்கு பிறகு எனக்கு ஒரு படமும் கிடைக்கவில்லை, மேலும் எங்குமே எனக்கு வேலையும் கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.மாபெரும் வெற்றி பெற்ற படத்தில் நடித்த திருநங்கைக்கு இப்படி ஒரு நிலைமையா என்று அனைவரின் பேசு பொருளாக மாறியுள்ளது ப்ரியாவின் இன்டெர்வியூ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *