ராம் சரண் மகளுக்கு முகேஷ் அம்பாணி வழங்கிய தங்கத்திலான சூப்பர் கிப்ட்…! இத்தனை கோடி பெறுமதிப்பு வாய்ந்ததா…?

ராம் சரண் உபாசனா என்பவரை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 11 ஆண்டுகள் கழித்து அண்மையில் குழந்தை பிறந்தது.சிரஞ்சீவி குடும்பத்துக்கு ராம் சரண் மூலமாக ஒரு வாரிசு வந்ததை அடுத்து அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர், நிஹாரிகா உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்தை ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு தெரிவித்தனர். ரசிகர்களும் தங்களது வாழ்த்தினை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அந்தப் பெண் குழந்தை சிறப்பாக வாழ்வதற்கு இறைவனையும் அவர்கள் பிரார்த்திப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு உபாசனா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது தனது குழந்தையை ராம்சரண் கையில் ஏந்தியிருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. அதன்படி இன்று ராம் சரண் – உபாசனா மகளுக்கு  ஹைதராபாத்தில் இன்று மாலை நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பலர்

கலந்துகொள்ளவிருக்கிறார்கள். விழாவுக்கு செய்யப்படும் ஏற்பாடுகள் தொடர்பான வீடியோவை உபாசனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. இந்த நிலையில் இத்தம்பதியினருக்கு நிதாம்பானியும் முகேசம்பானியும் 1கோடி மதிப்புள்ள தங்கத் தொட்டிலை பரிசாக வழங்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *