முதன்முறையாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அட்லி…! வைரலாகும் க்யூட் போட்டோ…!

தமிழ் சினிமாவில் வெற்றிப்பட இயக்குநர் வரிசையில் இருப்பவர் அட்லி.(Atlee)இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லி, ராஜா ராணி படத்தில், இயக்குநராக அறிமுகமானார். நயன்தாரா– ஆர்யா, நஸ்ரியா, ஜெய், சத்யராஜ் நடித்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் வெற்றிப் படங்களை தந்து, முன்னணி இயக்குநராக மாறிவிட்டார்.ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் விஜய் நடித்த போது, அந்த படத்தில் உதவி இயக்குநராக இருந்த அட்லி, விஜய்க்கு அறிமுகமானார். அப்போது, அவரது திறமையை புரிந்துகொண்ட விஜய், தெறி படத்தை இயக்க அட்லிக்கு வாய்ப்பளித்தார். அது வெற்றி பெற்றதை அடுத்து, மெர்சல் மற்றும் பிகில் படங்களை இயக்க வாய்ப்பளித்தார்.

அந்த படங்களும் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது. ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த அட்லி தற்போது முதன்முறையாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இயக்குனர் அட்லி தமிழ் திரையுலகில் இரண்டு மூன்று படங்களிலேயே இயக்கி பிரபல்யமானவர் அட்லி. முதல்முறையாக ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்திருந்தார்.முதல் படத்தையே ஹிட் படமாக கொடுத்ததால் அடுத்த படத்தை விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியிருந்தார். அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என எடுத்தப்படங்கள் எல்லாம் வெற்றியைக் கொடுத்து வந்தது.

தற்போது பொலிவூட் சூப்பர் ஸ்டார் சாருக்கான், நயன்தாராவை வைத்து ஜவான் என்றப் படத்தை இயக்கி இன்று வெளியிட்டிருக்கிறார்.அட்லி 2014ஆம் ஆண்டு துணை நடிகையாக நடித்த கிருஷ்ண பிரியாவை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு மீர் என்றப் பெயரையும் வைத்திருந்தார்கள். இந்நிலையில், ஜவான் படப்பிடிப்பில் படும் பிஸியாக இருந்த அட்லி தற்போது அவர் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *