மீண்டும் ஒரு பாலியல் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து…! பகீர் கிளப்பிய பிரபலம்…!

கவிஞர் வைரமுத்து ஏற்கனவே பாலியல் சர்ச்சையில் சிக்கிய நிலையில் தற்போது மற்றொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டு’பாலியல் புகார் அளித்தார். தொடர்ந்து இவர், வைரமுத்து அனுப்பிய மெயில்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார்.மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். பிறகு இவர் மட்டுமல்லாமல் பல பெண்களுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், பிரபல பாடகி ஒரு பேட்டியில் வைரமுத்து குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “17 பெண்கள் வைரமுத்திற்கு எதிராக பாலியல் குற்றசாட்டை முன் வைத்திருக்கின்றனர். ஆனால் 4 பேர் மட்டும்தான் தைரியமாக தங்களது பெயரையும் முகத்தையும் வெளி உலகத்திற்கு காட்டியுள்ளனர்.பாலியல் வன்கொடுமை சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று. என்னுடைய கதையை நான் பகிர்வதற்கான நோக்கம் இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

எனக்கு நேர்ந்ததை போல பிற பெண்களுக்கு நடக்க நான் விரும்பவில்லை. பிரபல பாடகியான சின்மயி தொடர்ந்து வைரமுத்து மீதான குற்றசாட்டுகளை முன்வைக்கும் போது அவர் பலரால் விமர்சனம் செய்யப்பட்டார். சின்மயின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இது குறித்தான விசாரணை என்பது நடக்கபோவதில்லை, நடத்தவும் விடமாட்டார்கள்” என்று தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *