மிருகங்களிடம் மாட்டிக் கொண்டகயல் ஆனந்தி…! கடைசியில் என்ன செய்தார் தெரியுமா…?

தமிழ் நடிகைகளில் இளம் நடிகையாக அறிமுகம் ஆகி பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வந்த கயல் ஆனந்தி தற்பொழுது புதிய திரைப்படம் ஒன்று ஒப்பந்தமாகியுள்ளார்.அந்த திரைப்படம் ஆனது சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாக இருப்பதாக அதைப்பற்றி இயக்குனர் ராஜசேகர் கூறியுள்ளார்.கயல் படத்தின் மூலம், பிரபலமான நடிகை ஆனந்தி இந்த ஆண்டு குழந்தையுடன் தன்னுடைய இரண்டாம் ஆண்டு, திருமண நாளை கொண்டாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் அனைத்து நடிகர் – நடிகைகளுமே ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விடுவதில்லை.

ஆனால் ஒரு சிலர் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்கவில்லை என்றாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள். அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான, ‘பொறியாளன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் ஆனந்தி.இப்படம் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை என்றாலும், இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கயல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில், பாவாடை – சட்டை அணிந்த ஒரு கிராமத்து பெண்ணாக, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஆனந்தி. இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், முதலுக்கு மோசம் இல்லாமல் வசூலித்து. விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்தது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயமாக ஒரு மிருகம் இருக்கும்.  அது நம்மிடையே உள்ள மிருகங்களை விட மிகக் கொடியது என்று கூறுவார்கள். அது போன்ற மிருகங்களிடம் சிக்கித் தவிக்கும் கேரக்டரில் கயல் ஆனந்தி நடிக்க இருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.குடும்பத்தில் மிக எளிமையாக இருக்கும் கயல் ஆனந்தி அது போன்ற மிருகங்களிடம் சிக்கி எப்படி அவர்களிடம் இருந்து தப்பித்து வருகிறார்கள் என்பது தான் திரைப்படத்தின் முக்கிய கதை.இந்த திரைப்படத்தில் மேலும் கையில் ஆனதியுடன் முக்கியமான திரைப்படங்கள் நடிக்க இருப்பதாக திரைப்படத்தின் இயக்குனர் ராஜசேகர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *