தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் இஞ்சி இடுப்பழகியாகவும் திகழ்ந்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வந்தவர் நடிகை சிம்ரன். முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து டாப் நடிகையாக திகழ்ந்த சிம்ரன் சில நடிகை, பல நடிகர்களுடன் காதலில் இருந்து பின் அவரைவிட்டு நீண்டநாள் நண்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவரின் காதல் லிஸ்ட்டில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் நடிகர் அப்பாஸ். பூச்சூடவா படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நடித்த போது இருவரின் கெமிஸ்ட்ரியும் மிகவும் பொறுத்தமானதாக இருந்தது.
அதன்மூலம் இருவரும் காதலித்து வந்ததாகவும் பின் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அப்பாஸ்-ஐ காதலித்து வந்த போது சிம்ரன் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் இடத்திற்கு வந்ததால், அதை இதனால் கெடுத்துக்கொள்ள கூடாது என்று அந்த உறவை சிம்ரன் முறித்துக்கொண்டார்.
ஆனால் அப்பாஸின் அவரது நலம் விரும்பிகள் இதற்கு முன்பே அதெல்லாம் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொன்ன சில காலத்தில் சிம்ரன் பிரபுதேவா சகோதரர், ராஜு சுந்தரத்துடன் காதல் வயப்பட்டுவிட்டார். இதன்பின் அப்பாஸ் முன்னுக்கு வந்த அதே நேரத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டு வாய்ப்பில்லாமல் காணாம போனார்.