மாத்திரை போட்டு உறவா..? உடல் பரிசோதனைக்கு தயார் – கொந்தளித்த விஷ்ணுகாந்த்..!

மாத்திரை சாப்பிட்டு உறவில் ஈடுபட்டதாக கூறிய குற்றச்சாட்டுக்கு விஷ்ணுகாந்த் விளக்கம் அளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். தொடர்ந்து இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதன்படி, சம்யுக்தா ஒவ்வொரு நாளும் செக்ஸ் விஷயத்தில் என்னை உடலளவிலும் மனதளவிலும் பாடாய்படுத்தி விட்டார். மாத்திரை போட்டு தினமும் செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும், ஆபாச வீடியோக்களை பார்த்து அந்த மாதிரி பண்ண வேண்டும் என்று சொல்வார் எனவும் பல புகார்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள விஷ்ணுகாந்த், நான் படுக்கையறையில் கேமரா வைக்க சொன்னதாக அவர் தெரிவித்தபோது என் உடம்பு கூசியது. மாத்திரை போட்டு அவருடன் உடலுறவில் இருந்ததாக சொல்லியிருக்கிறார். நான் முழு உடல் பரிசோதனைக்கு தயாராக இருக்கிறேன். நான் மாத்திரை பயன்படுத்தியது உண்மையாக இருந்தால் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *