மருமகளாக ஏற்று கொள்ள மறுத்த முன்னாள் முதலமைச்சர்…! நடிகை ஜெனிலியாவின் மறுபக்கம்…!

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜெனிலியா.தமிழ் சினிமா கொண்டாடிய நடிகைகள் பலர் உள்ளர்கள். கியூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்த அழகாக படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்கள் நடித்தார், அவரது மார்க்கெட் இருக்கும் வரை தொடர்ந்து படம் நடித்தார். பின் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சினிமா பக்கமே வருவதில்லை. அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்,

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் அவர் நிறைய ரீல்ஸ் வீடியோ வெளியிடுவார். தற்போது ஜெனிலியா அவரது இரண்டு மகன்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் செம கியூட் புகைப்படம், ஜெனிலியாவின் மகன்கள் நன்றாக வளர்ந்துவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தை அடுத்து இவர் சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

ஜெனிலியா, தமிழ் படங்களை மட்டுமின்றி ஹிந்தி மற்றும் மராத்திய மொழிகளிலும் சில படங்கள் நடித்தார்.மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் என்பவரின் மகனும் ஹிந்தி நடிகருமான ரித்தீஷ் என்பவரை ஜெனிலியா காதலித்தார். ஆனால் இவர்களின் காதலுக்கு ரித்தீஷின் அப்பா சம்மதம் தெரிவிக்கவில்லையாம். இதையடுத்து ரித்தீஷ் தனது சமாதானப்படுத்தி ஜெனிலியாவை 2012 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *