மணிமேகலை பிரியங்கா மோதல்…! அனைத்து உண்மையையும் கொட்டித்தீர்த்த வனிதா…!

பிரபல ரிவி தொகுப்பாளர்களான மணிமேகலை மற்றும் பிரியங்காவின் மோதல் குறித்து வனிதா விஜயகுமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார். குக் வித் கோமாளி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை அந்நிகழ்ச்சியில் குக்காக இருந்த பிரியங்கா வேலை செய்யவிடாமல் இடையூறாக இருந்த நிலையில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாகவும், சுய மரியாதை விட்டு என்னால் இந்த வேலையை செய்ய முடியாது என்றும், தனது வேலையை பார்க்க விடாமல் தடுக்கின்றார் என்று பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் இருவருக்கும் ஆதரவாக அவரவர் கருத்துக்களையும்,
எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். பிரியங்காவை விமர்சித்து பலரும் பேசி வருகின்றனர். ஆனால் பிரபல ரிவி பிரபலங்கள் பிரியங்காவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால், அவர்களை குறிப்பிடும் வகையில், சொம்பை வைத்து மணிமேகலை வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.மேலும் மணி மேகலைக்கு கணவர் உள்ளதால், தன்மானத்துடன் இருப்பதாகவும்,

பிரியங்கா கணவருடன் இல்லை என்பதால் தன்மானம் இல்லை என்று கருத்து தெரிவித்தவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். மணிமேகலையும் அடாவடியான பெண் தான்… கணவரையே வாடா போடா என்று பேசுவார். காணொளியில் சொம்பு தூக்கி காட்டியது தவறான செயல்… குறித்த ரிவியில் என்ன நடக்கின்றது என்பது தனக்கு தெரியும். குறித்த மோதலுக்காக ஒருத்தருக்கு குரல் கொடுத்தால் சொம்பு என்று சொல்வது மிகவும் தவறு என்று வனிதா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *