மகள்களால் நிம்மதி இழந்து தவிக்கும் இயக்குனர் ஷங்கர்…! வெளியான அதிர்ச்சி தகவல்…!

பிரபல இயக்குனர் ஷங்கர் தனது மகள்களால் நிம்மதி இல்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் ஷங்கர். அவர் இயக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் கொடுக்கும் படங்களாகவே அமைவதால் மக்கள் மத்தியில் ஷங்கருக்கு நல்ல வரவேற்பு உண்டு. ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான், அதனால் நடிகர்களும் இவரது படங்களுக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இவர் இந்தியன் 2, ராம்சரணின் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கிவருகிறார்.

அதிர்ச்சி தகவல் இந்நிலையில், இவருக்கு 2 மகள்கள் உள்ளனர், அதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவரை திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவர்கள் 6 மாதத்தில் பிரிந்தனர், தற்பொழுது விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இரண்டாவது மகள் அதிதியை டாக்டருக்கு படிக்க வைத்தார் ஆனால் அவர் நடிப்பில் தான் ஆர்வம் உள்ளது என்று ஷங்கரின் பேச்சை கேட்காமல் படத்தில் நடிக்க வந்துவிட்டார்.

இதனால் இரண்டு மகள்களை நினைத்து நிம்மதி இழந்து தவிக்கிறார், சினிமாவில் நாட்டமே இல்லாமல் இருக்கிறார். இதனால், இந்தியன் 2 திரைப்படமும், ராம் சரணின் படத்தின் வேலையும் தாமதமாகிக் கொண்டே செல்கிறது என்று பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதையாவது கொளுத்திப்போடுவதே இவரின் வேலை என்று திட்டி தீர்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *