மகளையும் அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன் விநாயகன்…! விசாரணையில் வந்த பகிர் தகவல்…!

விநாயகன் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று ரஜினியின் ஜெயிலர் படம் வரை நடிக்க வாய்ப்பை பெற்றவர் தான் விநாயகன். இவர் பெரும்பாலான படங்களில் துணை மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் கலக்கிய ஐந்து படங்களை தற்போது பார்க்கலாம். திமிரு விஷால், ரீமா சென், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் திமிரு. இந்தப் படத்தில் ஸ்ரேயா ரெட்டிக்கு பக்கபலமாக லொடுக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார் விநாயகன். திமிரு படமே விநாயகனின் அறிமுகப்படமாக அமைந்தது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் ஊனமுற்றவராக நடித்திருப்பார்.

சரவணன் இயக்கத்தில் சிம்பு, சினேகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சிலம்பாட்டம். இப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த படத்தில் சிம்பு தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் அவரது உயிர் நண்பனாக விநாயகன் நடித்திருந்தார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். தற்போது இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

பகிர் தகவல் சில வருடங்களுக்கு முன்பு மாடல் அழகி மிருதுளாதேவி என்பவர் விநாயகன் மீது பரபரப்பு குற்றம்சாட்டினார். அதில் அவர், என்னையும் அம்மாவையும் விநாயகன் படுக்கைக்கு அழைத்தார் பாலியல் ரீதியாக சொந்தரவு செய்கிறார் என்று புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார் விநாயகனை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது விநாயகன், நடிகையையும் அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்ததை ஒத்துக்கொண்டார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *