ப்ரீத்தியை அவசர அவசரமாகத் திருணம் செய்ய இது தான் காரணம்…! முதன் முதலாக ஓபனாகப் பேசிய நடிகர் கிஷோர்…!

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கிஷோர்.இதனைத் தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா படத்தில் மார்க்கெட்டில் வேலை செய்யும் இளைஞராக நடித்திருந்தார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. பின்னர் வஜ்ரம், நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது படங்களில் ஹீரோவாகவும் நடித்து வரும் கிஷோர்,

அண்மையில் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.மேலும் கிஷோர் தன்னை விட 4 வயதில் பெரிய பொண்ணை திருமணம் செய்ததாக சர்ச்சைகளும் கிளம்பின.இருப்பினும் அவர்கள் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதோடு தம்முடைய புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படியான நிலையில் இருவரும் இன்டர்வியூ ஒன்று கொடுத்துள்ளனர். அதில் ப்ரீத்தியின் அப்பா 4 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர் ஆசையை நிறைவேற்ற தான் சீக்கிரமாகவே கல்யாணம் பண்ணியதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு அப்பாவின் உடல் நிலை சரியாக இருந்திருந்தால் கண்டிப்பாக கிசோர் தன்னுடைய 31 வயதுக்க மேல் தான் ப்ரீத்தியை கல்யாணம் செய்திருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *