பேய் ஓட்டுவதாக சொல்லி சாமியார் செஞ்ச வேலையை பாருங்க… கதறும் பெண்… வைரலாகும் வீடியோ..!

பேய் என்பது பலரும் பயப்படும் ஒரு விசயம். இருட்டைப் பார்த்தாலே பேய் இருக்கும் என பயந்து நடுங்குபவர்கள் ஒருபுறம்…பேயா? அப்படி ஒன்று இல்லவே இல்லை என கெத்தாக சுடுகாட்டுக்கே போய் செல்பி எடுப்பவர்கள் மறுபுறம் என நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், பேய் பயத்தில் சிலரின் நம்பிக்கையும் இருக்கிறது.

அப்படி பேய் பிடித்த ஒரு பெண்ணை, சாமியாரிடம் அழைத்துச் செல்ல அவர் செய்த் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் ஆபானி என்னும் சின்ன ஊர் உள்ளது. இங்குள்ள மாரிகாம்பா அம்மன் கோயிலில் மல்லிகார்ஜூன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கோயிலில் வைத்தே பேய் பிடித்தவர்களுக்கு பேய் ஓட்டும் வேலையும் செய்கிறார். இவர் பேய் பிடித்து இருப்பதாகச் சொல்லி பெண் ஒருவரை சரமாரியாக அடிக்கும்வீடியோ சமூகவளைதலங்களில் வைரலாகி வருகிறது.

பேய் பிடித்திருப்பதாக நம்பப்படும் அந்த பெண், அடிக்க வேண்டாம் என கதறி அழுதும் அந்த சாமியார் அடிப்பதை நிறுத்தவில்லை. குறித்த அந்த காட்சியை சமூக ஆர்வலர்களும், பெண்ணியவாதிகளும் போலீஸின் கவனத்த்துக்கு கொண்டு போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *