பீரியட்ஸ் நேரத்தில்…! அதுல என்ன தப்பு…! ஓப்பனாக பேசிய ஸ்ருதிஹாசன்…! அவர் கூறியதை கேட்டு குவியும் லைக்குகள்…!

நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்கள் மற்றும் அவர்களுக்கு மாத மாதம் ஏற்படக்கூடிய பீரியட்ஸ் குறித்தும் அதன் பின்னால் இருக்கக்கூடிய பேசப்பட வேண்டிய.. ஆனால், ரகசியமாக வைத்திருக்கக்கூடிய சில விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது, பீரியட்ஸ் என்பது அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடியது. அவர்கள் அதற்காக கடைகளுக்கு சென்று நான் பெண்களை வாங்கினால் அதனை ஒரு பிரவுன் பேப்பரை போட்டு சுற்றி கொடுக்கிறார்கள். அதுல என்ன தப்பு இருக்கு..? எதற்காக இதனை மறைக்க வேண்டும்..? இது பெண்களுக்குடைய அடிப்படை தேவை.

அதனை மறைப்பதன் மூலம் பெண்களுக்கு தங்கள் மீது ஒரு தாழ்வு மனப்பான்மை இந்த சமூகம் கொடுக்கிறது.இந்த காலத்திலும் எதற்காக அதனை மறைத்துக் கொண்டிருக்க வேண்டும். பீரியட்ஸ் நேரத்தில் வலி ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு கூறும்போது அது சாதாரணமானது தான்.. நீ பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அதனை தவிர்த்து விடுகிறார்கள்.ஒருவேளை அது அவர்களுடைய உடல் நல பிரச்சனையாக இருக்கலாம்.., அல்லது அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். அதனால் கூட வலி ஏற்படலாம். அதற்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

ஆனால், அது அப்படித்தான் இருக்கும்.. என்று ஒரு பெண்ணை முடக்கி வைப்பது என்பது பைத்தியக்காரத்தனம் இன்னும் பல பேருக்கு நாப்கின்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று நினைக்கிறேன் சிட்டியில் வளரும் பெண்களுக்கு இது பற்றி பிரச்சனை இல்லை ஆனால் சிட்டியை தாண்டி வெளியே செல்ல செல்ல கிராமப்புரங்களில் இருக்கும் பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு இருக்கிறதா..? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவருடைய இந்த பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *