பிரபல நடிகை கலைராணியா இது? அவரின் இப்போதைய நிலை தெரியுமா? பட வாய்ப்பு இல்லாமல் பரிதாபம்…

ஹீரோ, ஹீரோயின் என்று இல்லை. சில நேரங்களில் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடிப்பவர்களும் மக்கள் மனதில் நச்சென பதிந்துவிடுவார்கள்.அந்தவகையில் தமிழ் சினிமாவில் பல படங்களிலும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து அசத்தியவர் கலைராணி.

பட படங்களிலும் அம்மா ரோலும் செய்திருக்கிறார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில், ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்திலும் இவர்தான் அர்ஜூனின் அம்மாவாக நடித்திருந்தார். இவர் கூத்துப்பட்டறையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்.

இவர் முதன் முதலில் ஊமை விழிகள் என்னும் படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார். விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்டாக நடித்துள்ளார். கீச்சுக்குரலும், அதில் இழையோடும் இவரது அழுகையும் பல படங்களிலும் இவரை அழுகைக் காட்சிக்காவே பயன்படுத்தச் செய்தது. இப்படியெல்லாம் தமிழ் சினிமாவில் கலக்கி வந்த கலைராணி கொரோனாவுக்குப் பின்பு போதிய படவாய்ப்பு இல்லாமல் கிடைத்த சின்ன, சின்ன வேலைகளைச் செய்து குடும்பத்தை நகர்த்தி வருகிறாராம். இது திரையுலகினரை மட்டுமல்லாது அவரது ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *