பிரபல சின்னத்திரை நடிகர்கள் வீட்டில் ஏற்ப்பட்ட சோகம்…! இவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா…? பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

சீரியல் உலகின் டாப் நடிகர்களுள் முதன்மையானவர்களாக வலம் வருபவர்கள், ராஜ்கமல்-லதா ராவ் தம்பதியினர். இவர்கள், சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக சின்னத்துறையில் பல சீரியல்களில் முகம் காட்டியுள்ளனர். இவர்கள் வீட்டில்தான் சமீபத்தில் அந்த சோகம் அரங்கேறியுள்ளது. பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தம்பதி, ராஜ்கமல்-லதா. ராஜ்கமல் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி கொண்டிருந்த பல பிரபலமான தொடர்களில் நடித்தார். குறிப்பாக ஆனந்தம், ரெக்கை கட்டிய மனசு, செல்வி, காமெடி காலனி போன்ற பல சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் தொடரில் முக்கிய கதாப்பாத்திரம் இவர். இவரது மனைவி லதா ராவும் பெரிய சீரியல் நடிகை.

பிரபல நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1-ல் பங்கேற்ற போது இருவரும் காதல் வயப்பட்டனர், அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு லாரா, ராகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். லதா ராவ்-ராஜ் கமல் தம்பதியினர், சென்னை, மதுரவாயல் பகுதியில் வீடு ஒன்றை வாங்கி அதை படப்பிடிப்புக்கு அவ்வப்போது வாடகைக்கு விடுவது வழக்கம். அந்த வீட்டில் படப்பிடிப்புக்கு தேவையான பொருட்கள் பல இருந்துள்ளது. இந்த வீட்டிற்கு இரண்டு வாசல்களும் இருந்துள்ளன. இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி இவர்கள் வீட்டின் பின்பக்க வாசலின் பூட்டை உடைத்து யாரோ

சில அடையாளம் தெரியாத நபர்கள் 65 இன்ச் விலை உயர்ந்த தொகைக்காட்சியினை தூக்கிச் சென்றிருக்கின்றனர். தங்கள் வீட்டில் இருந்த விலை உயர்ந்த டிவி திருடு போனதை தொடர்ந்து, ராஜ் கமல்-லதா ராவ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். இவர்கள் புகார் கொடுத்ததை அடுத்து, மதுரவாயல் காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், சின்னத்திரை உலகிலும் அந்த வீடு இருக்கும் பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கமல்-லதா ராவ் தம்பதியினர் சீரியல்களில் மட்டுமல்லாது சில படங்களிலும் நடித்துள்ளனர்.  ராஜ்கமல், ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். இவர்களது இரண்டு மகள்களும் நன்றாகவே வளர்ந்து விட்டனர். அவ்வப்போது குடும்பமாக சேர்ந்து இவர்கள் அனைவரும் வெளியில் போவதையும் அப்படி பாேகையில் வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாவில் ரீல்ஸாக பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பல சின்னத்திரை பிரபலங்கள் போல

இவர்களும் யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு இணைய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக மாறியுள்ளனர். நட்சத்திர தம்பதியின் வீட்டில் நடந்த சோகம் போலவே, அந்த வீடு இருக்கும் பகுதியில் வசிக்கும் இன்னொருவருக்கும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் நிறுத்து வைத்திருந்த விலை உயர்ந்த காரை, யாரோ திருடிச்சென்றுள்ளனர். இதனால், அப்பகுதி மக்களை உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *