பிடிக்காமல் தான் தாலி கட்டினேன்…! மனைவி பற்றிய சீக்ரெட்டை ஓபனாக கூறிய மாரி செல்வராஜ்…!

“பிடிக்காமல் தான் தாலி கட்டினேன்.. ” என மனைவி மற்றும் திருமணம் வாழ்க்கை பற்றி மாரி செல்வராஜ் வெளிபடையாக பேசியுள்ளார். மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்கள் வாழை அவருக்கு நல்ல இடத்தை பிடித்து கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் பற்றிய பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக இருந்து வருகின்றது.தாலி கட்டுவதில் உடன்பாடு இல்லை..

இந்த நிலையிலி, காதல் திருமணம் செய்து கொண்ட மாரி செல்வராஜ், மனைவி கழுத்தில் தாலி கட்டுவதற்கு மறுப்பு தெரிவித்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய மாரி செல்வராஜ், “ நானும் என் மனைவியும் காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டோம். ஆரம்பத்தில் மாமனார் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. பின்னர் நாளடைவில் அது சரியாகி திருமணம் வரை வந்தது. என் மனைவியின் அம்மா தாலிக்கட்டி தான் திருமணம் செய்ய வேண்டும் என்றார்.

இதில் எனக்கு பெரிதாக உடன்பாடு இல்லை. இருந்தாலும் விருப்பம் இல்லாமல் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன். அதே போல என் மனைவிக்கும் தாலி மீது பெரிதாக விருப்பம் இல்லை. எங்களை பொறுத்தவரையில் ஒரு பெண்ணை காதலிகிறோம் என்றால் அந்த பெண்ணை எப்படியும் திருமணம் செய்து கொள்ளலாம்…” என ஓபனாக பேசியுள்ளார். இந்த செய்தி மாரி செல்வராஜ் ரசிகர்கள் பலரின் கவனத்திற்கு சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *