“பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே அந்த பழக்கம் இருக்கு…!” வெளிப்படையாக கூறிய ஜெனிலியா…!

நடிகை ஜெனிலியா சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசிய விஷயங்கள் அவரை சுற்றி இருந்த பிம்பத்தை உடைத்திருக்கிறது. ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஜெனிலியா கணவர் போட்ட ஆர்டரின் பேரில் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட்டார் என்று தகவல்கள் வட்டமடித்து வந்தன. இதனால், ஜெனிலியா குறித்தும் அவரது கணவர் குறித்தும் இப்படி ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு இருந்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜெனிலியா இது கறித்து தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, என் கணவர் ஆர்டரால் தான் நான் படத்தில் நடிக்க மறுக்கிறேன் என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால், உண்மை என்னவென்றால் நான் தான் அந்த முடிவை எடுத்தேன். ஒரே நேரத்திலும் குடும்பத்தையும், சினிமாவையும் என்னால் கவனித்து கொள்ள முடியாது.குடும்ப உலகம் வேறு, சினிமா உலகம் வேறு.. எனவே இரண்டு உலகங்களுக்கு நடுவே பயணிக்க முடியும் என நான் நம்பவில்லை. என் குழந்தைகளுடன் இருப்பதன் முழுப்பகுதியையும் நான் இன்னும் ரசிப்பதாக உணர்கிறேன் என்று ஜெனிலியா கூறியுள்ளார்.

நான் என் குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் இருப்பதை விரும்புகிறேன். நான் இதைச் செய்ய விரும்புகிறேன். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அப்போது நான் அதை தேர்வு செய்வேன். நான் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்யும் பழக்கம் இன்று, நேற்று வந்ததில்லி. நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே அந்த பழக்கம் எனக்கு உள்ளது என கூறியுள்ளார் அம்மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *