தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், நடிப்பதோடு மட்டுமில்லாமல் புதிய தொழிலிலும் ஈடுபட உள்ளார். #AmalaPaul #Amala நடிகை அமலாபால் ‘அதோ அந்த பறவை போல’ என கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும் அவர், அடுத்து சொந்தமாக தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார். ஊட்டச்சத்து தொடர்பான பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான இந்த நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களை அதிக அளவில் பணிகளில் ஈடுபடுத்த உள்ளார்.சமீபத்தில் கேரள வெள்ளத்தின் போது நேரடியாக சென்று களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்ட
அமலாபால் அடுத்து பெண்கள் சுயமுன்னேற்றத்தை கையில் எடுத்திருப்பதற்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து பின் விவாகரத்து தனியாக வாழ்ந்து வருகிறார். “கடந்த ஒரு மாதமாக நான் வாழ்ந்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுப்பது அபாரமான அனுபவம், அதுவும் முதல்முறையாக என் தாய்மொழியில் வரும்போது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை” என்று அமலா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமலா விரைவில் மோகன்லாலுடன் ‘லைலா ஓ லைலா’ படத்திலும், நிவின் பாலியுடன் பெயரிடப்படாத மற்றொரு படத்திலும் நடிக்கவுள்ளார்.அதன்பின் வாய்ப்பில்லாமல் ஆண் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி, போட்டோஷூட் என்று பிஸியாகினார். தற்போது வாய்ப்பில்லாமல் மண்பாண்டம் செய்யும் வேலையை ஆரம்பித்த புகைப்படத்தை பகிர்ந்து வீடியோவை வெளியிட்டார். ஆனால், அது ஒரு போட்டோஷூட்டிற்கு எடுக்கப்பட்ட மண்பாண்டம் செய்யும் ஸ்கில் என்று கூறி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram