படப்பிடிப்பில் திடீர் விபத்து…! பிரபல நடிகர் மருத்துவமனையில் அவசர அனுமதி…! ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி …!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ்.பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி உள்ளார். இதனை அடுத்து, இவர் தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக அறியப்படுகிறார்.தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் ‘2018’ என்ற திரைப்படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றியடைந்தது.

இதனையடுத்து ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி இருந்த டொவினோ தாமஸ், சமீபத்தில் ‘நடிகர் திலகம்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக திடீர் விபத்து ஏற்பட்டது.இதில் பலத்த காயமடைந்த நடிகர் டொவினோ தாமஸை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன்பின் மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு இரண்டு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.நடிகர் டொவினோ ’நடிகர் திலகம்’ படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டிருந்தார்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விபத்தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் டெவினோ தாமஸ் இரண்டு வாரங்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். டொவினோ விரைவில் காயத்தில் இருந்து குணமடைய வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *