நைட்டியில் இளையராஜா பாட்டுடன் சமையல் செய்த குஷ்பூ…! எங்கு இருக்கிறார் தெரியுமா…?

நைட்டியில் இளையராஜா பாட்டுடன் சமையல் செய்த நடிகை குஷ்பூவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை குஷ்பூ. இவர் கடந்த 1980 ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தவர். இதனை தொடர்ந்து 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகி வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.ரஜினிகாந்த், கமல், சத்தியராஜ், பிரபு என கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஒரு வலம் வந்திருக்கிறார். அந்த காலப்பகுதியில் குஷ்பூவை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.

இதனிடையே கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருந்து காலப்பகுதியில் குஷ்பூ நடிகர் பிரபுவை காதலிக்கிறார் என்ற செய்தி பரவலாக இருந்தது. பின்னர் அந்த கதை அப்படி மறைந்து திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள், சினிமா , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அரசியல், குடும்பம் என பிஸியாக இருக்கும் நடிகை குஷ்பூ நைட்டியுடன் சமையல் செய்யும் காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “ இளையராஜா, SPB காம்போ பாடல்கள் கேட்கவே இனிமையாக இருக்கும். இந்தியாவிலிருந்து குக்கர் கொண்டு வந்து லண்டனில் சமைத்து கொண்டிருக்கிறேன். என்னுடைய இளைய மகள் மேற்படிப்பை லண்டனில் படிக்க வந்துள்ளார். அம்மா என்பதால் நானும் என்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டேன்…” என புன்னகையுடன் கூறியுள்ளார்.குஷ்பூவின் இந்த பதிவு ரசிகர்கள் பலரின் நெஞ்சங்களை கவர்ந்துள்ளது. எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் பிள்ளைகளுக்கு தன்னுடைய கடமைகளை செய்து தான் ஆக வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *