செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சரண்யா துரடி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தமிழ் சீரியல் மூலம் நன்று அறியப்பட்ட இவர் தொடர்ந்து நிறைய சீரியல்கள் நடித்து வந்தார். தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர் கலைஞர், ராஜ், புதிய தலைமுறை என பல தொலைக்காட்சியில் செய்தி வாசித்துள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார். நெஞ்சம் மறப்பதில்லை, ரன், ஆயுத எழுத்து, ரோஜா, வைதேகி காத்திருந்தால் போன்ற சின்னத்திரை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை சரண்யா துராட்டி.
செய்தி வாசிப்பாளராக பணியாற்றி நடிகையான சரண்யா ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். இலங்கை சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழரான ராகுல் சுதர்சன் என்பவரை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.அதன்பின் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிய சரண்யா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.இப்போது நடிப்பதை தாண்டி தனது காதலருடன் வெளியூர் சுற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் சரண்யா.
ஒவ்வொரு நாளும் விதவிதமான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிடுகிறார். அண்மையில் இவர் தனது தலைமுடியை கியூட்டான கட் செய்து சூப்பர் லுக்கிற்கு மாறியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார், டோரா போல் உள்ளாரே எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது துருக்கியில்3 இருக்கும் கிளியோபர்டா நீச்சல் குளத்தில் நீச்சல் ஆடையுடன் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram