நான் செஞ்ச பெரிய தப்பே அவனை கல்யாணம் செஞ்சதுதான்… மனம்திறந்து பேசிய பிரபல நடிகை..!

பிரபல்யமான நடிகையான அவர், தான் வாழ்க்கையில் செய்த பெரிய தவறே அவனை கல்யாணம் செஞ்சதுதான் என மனம் திறந்து கூறியுள்ளார். அவர் யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். மலையாளத்தில் தனக்கென தனி ரசிகர்படையை வைத்திருப்பவர் ஸ்வேதா மேனன். இவர் பாலிவிட் மாடலான பாபி போன்ஸ்லே என்பவரை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார்.

கருத்து வேறுபாடு காரணமாக பாபியை டைவர்ஸ் செய்தவர், 2011ல் ஸ்ரீவல்சன் என்வரை கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்போது சபைனா மேனன் என்னும் என்னும் பெண்குழந்தை இருக்கிறது. இந்நிலையில் தன் முதல் திருமணம் குறித்து அண்மையில் மனம் திறந்துள்ளர் நடிகை ஸ்வேதா.

அதில் அவர், ‘’என் வாழ்க்கையில் நான் செஞ்ச மிகப்பெரிய பெரிய தப்பே பாபியுடனான கல்யாணம்தான். என் அப்பா கொஞ்சம் கண்டிப்பானவராக இருந்துருந்தா அந்த மேரேஜ் என் லைப்ல நடந்துருக்காது. மகிழ்ச்சி, சுதந்திரமான வாழ்வுக்கு ஒரு சிறுவனைப் போல போராடினேன்.நான்கு சுவர்களுக்கு உள்ளே நான் அடைபட்டதை என் வீடே விரும்பியது இல்லை. நான் வேலைக்குப் போய் சுதந்திரமாக வாழணும்ன்னு அவுங்க பீல் செஞ்சாங்க. வீட்டில் தனிமையில் இருந்த நான் காதலில் விழுந்தேன்.

நான் பாபியைத்தான் கட்டுவேன்னு ஒத்தகால்ல நின்னப்போ, என் அப்பா நீ லைப்ல பீல் செய்யப்போறன்னு சொன்னாங்க. என் மேரேஜ் விவாகரத்தில் முடியும்ன்னு அப்பவே என் அப்பாக்கு தெரிஞ்சுருந்துருக்கு. இப்பவும் விவாகரத்து பத்தி நிறைய வதந்திங்க வருது. இப்பல்லாம் அதுக்கு சிரிக்க கத்துகிட்டேன். போலிசெய்தி நிறைய சுத்துது”என்கிறார் ஸ்வேதா மேனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *