நான் எப்போதும் உங்களுக்கு நன்றி கூற கடன் பட்டவன்…! 13 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நடிகர் சசிகுமார்…!

தமிழ் திரை உலகில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் சசிகுமார். சுப்ரமணியபுரம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இதற்காக மூன்று விருதுகளையும் பெற்றார். இப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியைமுய் பெற்றது. சசிகுமார் அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து “ஈசன்” என்ற திரைப்படத்தை இயக்கியதோடு, சுமார் 13 ஆண்டு காலமாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வருகின்றார்.ஆனால் இந்த 13 ஆண்டுகளில் ஒரு சிறந்த நடிகர் என்று போற்றப்படும் அளவிற்கு பல திரைப்படங்களை தனது நடிப்பால் வெற்றி திரைப்படங்களாக மாறியுள்ளார்.

குறிப்பாக அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான “அயோத்தி” என்ற திரைப்படம், ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் என்றே கூறலாம். இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பதிவின் மூலம் இயக்குநருக்கும், அந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும், குறிப்பாக சசிகுமாரை தனது நண்பர் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது “பகைவனுக்கு அருள்வாய்” என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். அதே போல மேலும் இரு திரைப்படங்கள்,

அவருடைய நடிப்பில் உருவாகி வரும் நிலையில், இன்று தனது முதல் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை நிறைவுகூர்ந்த அவர், மக்களாகிய நீங்கள் அந்த படத்தை மாபெரும் வெற்றி திரைப்படமாக மாற்றிக் கொடுத்ததற்கு என்றும் நான் நன்றி கடன் பட்டவன் என்று கூறியுள்ளார். மேலு இந்த அருமையான நாளில் நான் மீண்டும் ஒரு இயக்குநராக களம் இறங்க உள்ளேன், அடுத்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறி, அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *