நயந்தாராவை நம்ப வைத்து ஏமாற்றிய முன்னணி நட்சத்திரம்…! கடும் கோபத்தில் நடிகை…!

நயன்தாரா தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்துவருகிறார். அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.இந்தப் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் கால்பதிக்கவிருக்கிறார். இந்த நிலையில் பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் பழைய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு முன்பு, தி ஃபேமிலி மேன் 2 தொடரை பிரபலப்படுத்தும் விதமாக சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது சக நடிகர்களுடன் நடிப்பதில் இருக்கும் அசௌகரியம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு சமந்தா, நான் தற்போதுதான் தென்னிந்தியாவின் பெரிய கதாநாயகியான நயன்தாராவுடன் ஒரு படம் நடித்திருந்தேன் என சமந்தா சொல்லும்போது குறுக்கிட்ட கரண் ஜோஹர், அவர் என் லிஸ்ட்டில் இல்லை என்றார். தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று அங்கு வெற்றியும் கொடுத்துவிட்டார் நயன்தாரா.ஆனாலும் அவர் எதிர்பார்த்த விஷயங்கள் சில நடக்கவில்லை என பல செய்திகள் பேசப்படுகிறது. ஜவான் படத்தில் நடிகை நயன்தாரா நடித்த பல காட்சிகளை

இயக்குனர் அட்லீ எடிட் செய்து தூக்கிவிட்டாராம். கதாநாயகி நயன்தாராவாக இருந்தாலும், கேமியோ ரோலில் நடித்த தீபிகா படுகோனுக்கு தான் அட்லீ முக்கியத்துவம் கொடுத்ததாக கூறப்படுகிறது.அட்லீ மீது வருத்தம் இதனால் நயன்தாரா இயக்குனர் அட்லீ மீது வருத்தத்தில் இருப்பதாகவும், அதனால் தான் அவர் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொள்ளவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். இயக்குனர் அட்லீ நயன்தாராவை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *