நம்பிவந்தவரை நிர்வாணமாக்கி போட்டோ எடுத்து மிரட்டிய சீரியல் நடிகை…! தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்ட காதலர்…!

தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைய அடைய மோசடிகளும் அதிகரிக்கத்துவங்கியுள்ளது. அதிலும் பணமோசடி சம்பந்தமான பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளனர். அப்படி கேரளாவில் பட்டம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ விரரிடம் கடந்த மாதம் வீடு வாடகைக்கு வேண்டும் என்று ஒரு பெண் கேட்டிருக்கிறார். அதுதொடர்பாக அப்பெண் அடிக்கடி அவரை சந்துத்து ஆசையாக பேசி தனியாக சந்திக்கவும் விரும்புவதாகவும் உல்லாசமாக இருவரும் இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். அப்படி அவரிடம் மயங்கிய அந்த ராணுவ வீரர் அப்பெண் சொன்ன இடத்திற்கு சென்றிருக்கிறார்.

அங்கு அந்த ராணுவ வீரரை நிர்வாணமாக்கி புகைப்படத்தை எடுத்துள்ளார். மேலும் உடனே அங்கு அப்பெண்ணின் காதலர் வர, மேலும் பல நிர்வாண போட்டோ மற்றும் வீடியோவை எடுத்து 25 லட்சம் தரவேண்டும் இல்லை என்றால் இணையத்தில் வெளியிடுவோம் என்று அப்பெண் மிரட்டி இருக்கிறார். அதற்கு பயந்து போன அந்த நபர் 11 லட்சம் ரூபாய் கொடுத்தும் மீதி பணத்தை கொடுக்க வேண்டும் என்றும் கூறி மிரட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அந்த ராணுவ வீரர் போலிசில் புகாரளிக்க, போலிஸ் உதவியுடன் பணத்தை கொடுப்பதாக கூறி இருவரையும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். விசாரணையில் அந்த பெண் சீரியல் நடிகை நித்யா சசி என்றும் மற்றும் அந்த காதலர் பினு என்பதும் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்து போலிசார் விசாரித்து வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *