நடிகர் விஜய் அதிகம் பேசாததற்கு இதுதான் காரணமா..? – ரகசியம் உடைத்த எம்.எஸ்.பாஸ்கர்..!

நடிகர் விஜய் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் பல ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார். பிரபல நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் முதலில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தனது சினிமா கரியரை தொடங்கினார். தொடர்ந்து இவர் பல படங்களில் டப்பிங் செய்து பின்னணி வாய்ஸ் கொடுத்துள்ளார். பின்னர், இவர் பல படங்களில் நடித்து தனது திறமையான நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.

மேலும் இவர், தன்னுடன் நடித்துள்ள பல நடிகர்கள் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து, அவர் தனது பேட்டியில், நடிகர் விஜய் குறித்து, அவர் ஏன் அதிகம் பேசமாட்டார் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், “அவர் என்ன பேச வேண்டும் என கேட்கிறேன்.

என்னை போன்றவர்களை பார்த்தால், வாங்க அண்ணா நல்லா இருக்கறீங்களா சாப்பிட்டீங்களா என விசாரிக்கிறார். உட்கார வைத்து பேசுகிறார். மற்றபடி அவர் வேலையில் அவர் சரியாக இருக்கிறார். நிறைய பேசினால், தலை மேல ஏறிக்கொள்வார்கள். இது பொதுவான விஷயம்தான். அதனால்தான் அவர் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை.

பேசினால், அடுத்த படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் வாங்கி கொடுங்க என்பார்கள். உடனே அதற்கு சரி என்று பொய் சொல்ல வேண்டும். இதையெல்லாம் தவிர்க்க தான் விஜய் போன்றவர்கள், யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *