தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் தனி இடத்தை பிடித்த நடிகைகளுள் ஒருவர் சாய் பல்லவி. இவருக்கு, குறிப்பாக தமிழ் நாட்டில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். பெரும்பாலும் மேக்-அப் போடாமல் இயற்கை அழகை பேணுபவர் சாய் பல்லவி. இவர், தனது பியூடி டிப்ஸை ஒருமுறை சாய் பல்லவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன் மூலம் ரசிகர்களுக்கு சில அழகு குறிப்புகளை கூறினார். அவை என்னென்ன தெரியுமா? நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது வீட்டில் அடிக்கடி நீங்கள் செய்யக்கூடிய ரகசியமான அழகு குறிப்பு ஏதாவது இருக்கிறதா..?
அதாவது முகத்திற்கு முல்தானி மாட்டி போடுவது போன்ற விஷயங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை சாய் பல்லவி முகத்திற்கு நான் மஞ்சள் தடவிக் கொள்வேன். அவ்வப்போது முகத்தில் பருக்கள் வந்தால் அந்த இடத்தில் மஞ்சள் வைப்பேன். அதைத் தாண்டி தயிர் தடவி இருக்கிறேன். தேன் கொண்டு முகத்தை தேய்த்து விடுவேன் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து தேன் தடவினால் முடி வெள்ளை ஆகிவிடும் என்று கூறுவார்களே..! உங்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லையா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த நடிகை சாய் பல்லவி, தேன் தேய்த்தேன் ஆனால் இதுவரை எனக்கு அது நடக்கவில்லை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று பதில் கொடுத்து இருக்கிறார்.