அபர்ணா பாலமுரளி தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோ என்று பதறி விடாதீர்கள். நடிகை அபர்ணா பாலமுரளி சமீபத்திய பேட்டி ஒன்றில் கேளிக்கையான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அது என்ன கேள்வி என்றால்.. மூன்று பிரபலங்களின் பெயரை கூறுவோம். அதில் ஒரு பிரபலத்தை நீங்கள் டேட் செய்ய வேண்டும். ஒரு பிரபலத்தை நீங்கள் திருமணம் செய்ய வேண்டும். ஒரு பிரபலத்தை நீங்கள் கொலை செய்ய வேண்டும். யாரை என்ன செய்வீர்கள் என்று நீங்கள் கூற வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை நடிகை அபர்ணா பாலமுரளி எதிர்கொண்டார்.
சரி கேளுங்கள் என்று கேட்டார். நடிகர் டோமினோ தாமஸ், நடிகர் சூர்யா, நடிகர் துல்கர் சல்மான். இந்த மூன்று பேரில் யாரை திருமணம் செய்வீர்கள்..? யாரை டேட் செய்வீர்கள்..? யாரை கொலை செய்வீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த நடிகை அபர்ணா பாலமுரளி. நடிகர் டோவினோ தாமஸ்-ஐ டேட் செய்ய ஆசைப்படுகிறேன். நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். அடுத்து என்ன ஆப்ஷன் கொலை செய்ய வேண்டுமா..?
அப்படி என்றால் துல்கர் சல்மானை கொலை செய்து விடுவேன் என்று பகீர் ஆகிவிட்டார் அம்மணி. மன்னித்து விடுங்கள்.. துல்கர் சல்மானை கொலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல. ஆனால், ஒரே நேரத்தில் இதுவரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது அல்லவா..? அதனால் கொலை செய்து விடுவேன் என்று கூறினேன் துல்கர் என்னை மன்னித்து விடுங்கள்.. என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி.
Wishing You A Very Happy Birthday
Beloved @Aparnabala2 ❤️✨Best Wishes From @dulQuer Fans💖#HBDAparnaBalamurali ❣️#DulquerSalmaan || #AparnaBalamurali #Kurup || #SooraraiPottru 💕 pic.twitter.com/PmGFCCTzsO
— SOLO_47 (@Ameen__Xo) September 11, 2020