திருமணமாகி குழந்தை பெற்ற ஒரே வருடம்…! முகம் வீங்கி குண்டாகி அடையாளம் தெரியாமல் போன நடிகை பூர்ணா…!

மலையாள நடிகையாக அறிமுகமாகி தமிழில் முடியாண்டி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பூர்ணா. இதன்பின் சிறு பட்ஜெட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த பூர்ணா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிப்படங்களில் நடித்து வந்தார்.தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. அதன்பின்னர் கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ‘குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், எனது அடுத்த வாழ்க்கை பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன்’ என்று அவர் தெரிவித்து இருந்தார். வில்லி கதாபாத்திரத்திலும் நடித்த பூர்ணா, கடந்த ஆண்டு துபாய் தொழிலதிபர் சானித் ஆசிஃப் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு மகன் சமீபத்தில் பெற்றெடுத்தார் நடிகை பூர்ணா.

திருமணத்திற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ஒருசில படத்தில் கதநாயகியாகவும் நடித்து வந்தார். சமீபத்தில் டெவில் என்ற படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை பூர்ணா, குழந்தை பெற்றப்பின் முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறி குண்டாகி காணப்பட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *