தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பின் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் கமிட்டாகிய படங்களில் நடித்து வந்த நயன் தாரா, மிரட்டலான லுக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் நடித்துள்ளார். திருமணத்திற்கு முன் எப்படி கிளாமரில் உச்சம் காட்டி நடித்தாரோ அதேபோல் ஜவான் படத்தில் கொஞ்சம் பாலிவுட் ரசிகர்களுக்காக கிளாமரில் நடித்திருக்கிறார். ஆனால் சில ஆண்டுகளாகவே அடக்கவுடக்கமான சேலையில் தான் தமிழ் படங்களில் நடித்து வந்தார்.
தற்போது நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ஈ படத்தில் கிளாமராகவும் நடித்திருப்பார்.இதைத் தொடர்ந்து ஈ படப்பிடிப்பின் போது, நயன்தாரா ஷூட்டிங்கிற்கு சரியாக வராமல் இருந்திருக்கிறார். மேலும் அப்படியே வந்தாலும் போனும் கையுமாகவே எந்நேரமும் சிம்புவுடன் சிரித்து, அல்லது அழுது பேசி வருவாராம். அதை அறிந்தும் அறியாத மாதிரி இருந்து வந்திருக்கிறார் ஆர் பி சௌத்ரி.ஒரு கட்டத்தில் இவர்களின் காதலை அறிந்து பிறகு கோபம் கொண்ட இயக்குனர் தன் படப்பிடிப்பு தாமதம் ஆகுவதால் நயன்தாராவை குற்றம் சாற்றி இருக்கிறார்.
மேலும் அவரிடம் உங்களால் இப்படத்தை முடித்து தர முடியுமா, முடியாதா என்று கேட்டிருக்கிறார்.அவ்வாறு உங்களால் முடியாது என்றால் பரவாயில்லை. இனி நான் நடப்பதை பார்த்துக் கொள்கிறேன் என்று சவால் விட்டிருக்கிறார். இது நயன்தாராவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்போது ஒரு காட்சியில் ஜீவா, நயன் தாராவை இடுப்பை பிடித்து லிப்லாக் கொடுத்த காட்சி எடுக்கப்பட்ட ஷூட்டிங் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.