தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகர் கார்த்தி. இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வம் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.குந்தவை பாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷா, கார்த்தியின் பதிவுக்கு நகைச்சுவையாக பதில் கொடுத்துள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுத் திட்டமான பொன்னியின் செல்வன் படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் உள்ளது.போர்வீரன் ஆதித்ய கரிகாலனாக சீயான் விக்ரமும், துணிச்சல்காரன் வந்தியத்தேவனாக கார்த்தியும் நடித்து இருக்கின்றனர். நந்தினி கதாபாத்திரத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.
குந்தவையாக நடிக்கும் த்ரிஷா போஸ்டர் நேற்று ( ஜூலை 7 ) வெளியானது. அந்த புகைப்படத்தை பார்த்த நடிகர் கார்த்தி, ”இளவரசி, உங்களது லைவ் லொகேஷனை அனுப்புங்கள்.உங்கள் அண்ணனின் ஓலையை கொடுக்க வேண்டும் என கிண்டலாக பதிவிட்டார். அதற்கு பதில் அளித்துள்ள குந்தவை த்ரிஷா, ”மன்னித்துக் கொள்ளுங்கள். அரண்மனையில் ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட்டான நபருக்கு அனுமதி இல்லை” என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பர பணிகள் தொடங்கி உள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக விக்ரம், கார்த்தி ஆகியோரின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழுவினர் அறிமுகப்படுத்தினர். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா கார்த்தி இடையில் காதல் காட்சிகள் இருக்கும். இதில் கார்த்தி திரிஷாவிடம் பேசிய காதல் வசனம் ரசிகர்களை கவர்ந்தது.இந்நிலையில் கார்த்தியின் மனைவி அவரிடம், நீங்கள் படத்தில் காதல் காட்சி இல்லாத படங்களில் நடிக்க மாட்டீர்களா.உங்கள் அண்ணன் சூர்யா காதல் இல்லாத படத்தில் நடித்திருக்கிறார். நீங்களும் அப்படி நடிக்கலாம் என்று சொல்லி கார்த்தியிடம் தினமும் சண்டை போட்டதாக பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.