தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாட்டால் பிரிவதாக கூறினர்.இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழப்போவதாக கூறிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியதோடு அதற்கான காரணம் என்ன என்று கூறி பல கேள்விகள் எழுந்தது. ஒருசிலர், நடிகை கீர்த்தி சுரேஷுடன் நெருக்கம் காட்டியதாகவும், சில நடிகைகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இப்படி தனுஷ் நடந்து கொள்கிறார்.
என்று கூறியதாக பல விமர்சகர்கல் பலவிதமாக கூறி வந்தனர்.இந்நிலையில் தங்க மகன் படத்தில் நடித்த நடிகை சமந்தா தான் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிய முக்கிய காரணம் என்று பயில்வான் ஒரு இடியை போட்டுள்ளார். தங்க மகன் படத்தின் போது தனுஷுடன் சமந்தா நெருக்கம் காட்டியதை அறிந்த நாக சைதன்யா கூறியும் அதை கேட்காமல் சமந்தா 2021ல் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிர்ந்தார்.
அவர்களின் விவாகரத்து செய்தி வெளியாகிய அடுத்த ஆண்டில் தனுஷ், ஐஸ்வர்யா பிரியபோவதை அறிவித்தனர்.சமந்தாவுடன் தனுஷ் நெருக்கம் காட்டி வந்ததை அவரது வீட்டினருடன் சேர்ந்து சமரசம் செய்து பார்த்து ஐஸ்வர்யா அதையெல்லாம் கேட்காமல் தனுஷை பிரிய முடிவெடுத்ததாகவும் பயில்வான் கூறியிருக்கிறார். இதன்பின் 150 கோடியில் தனுஷ் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட பங்களா கட்டி பெற்றோருக்கு பரிசளித்து அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்.