தகாத உறவு, விவாகரத்து சர்ச்சைக்கு பின்பும் தனுஷுடன் இணையும் அமலா பால்…! ஷாக்கான ரசிகர்கள்…!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து தனுஷின் 50 வது படத்தை அவரே இயக்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது. இப்படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்க போவதாக சில தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு சூரரைப் போற்று, வீட்ல விசேஷம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் தனுஷின் 50 வது படத்தில் அமலா பால் நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் அமலா பால் தனுஷ் குறித்த செய்திகள் ஹாட் டாபிக்காக ஊடகங்களில் வெளியானது.இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து இப்போது மலையாளத்தில் ஆடுஜீவிதம் படத்தில் நடிகர் பிருத்வி ராஜுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரில் ரீமேக்கில் நடித்துவருகிறார். இந்தியிலும் நடித்து வருகிறார். இவர் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், நடிகை அமலா பாலும் ஏ.எல்.விஜய்யும் பிரிவதற்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் சமீபத்தில் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.அவர் கூறும்போது, திருமணத்துக்குப் பின் படங்களில் நடிக்க வேண்டாம் என்று அமலா பால் முடிவு செய்திருந்தார். ஆனால், நடிகர் தனுஷ் அவர் தயாரித்த ‘அம்மா கணக்கு’ படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதன் பிறகுதான் அமலாபால் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார்.

இதுதான் விஜய், அமலா பால் பிரிய காரணமாகி விட்டது என்று அழகப்பன் தெரிவித்திருந்தார்.இது பரபரப்பானது. இந்நிலையில், ஏ.எல்.அழகப்பனின் புகார் பற்றி, நடிகை அமலாபாலிடம் கேட்டபோது, அவர் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, எப்போதோ நடந்த சம்பவத்தை இப்போது கேட்கிறீர்கள். எனது விவாகரத்து சர்ச்சை தேவை இல்லாதது. அது என் சொந்த விஷயம். விவாகரத்து வாங்கிய முடிவு முழுக்க என்னுடையதுதான். அதற்கு வேறு யாரும் காரணமில்லை.வேறு ஒருவரை காரணமாக வைத்து விவாகரத்தை யாராவது வாங்குவார்களா? தனுஷ் என் நலம் விரும்பி.

இந்த விஷயத்தில் வேறு எதையும் பேச விரும்பவில்லை என்றார். ‘நீங்கள் ஒருவருடன் காதலில் இருப்பதாக சொன்னீர்களே? எப்போது திருமணம்’ என்று கேட்டபோது, ‘அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. நான் நடித்துவரும் படங்களை முடித்த பிறகு எனது காதல் பற்றி சொன்னது போல திருமணம் பற்றியும் அறிவிப்பேன் என்றார். அது என்னவென்றால் அமலா பால் தனுஷ் vip படத்தில் ஷூட்டிங்கில் இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும், தனுஷ் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் அமலா பால் வீட்டில் இருந்ததாக பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *