தமிழில் 2004ல் நடிகர் சிம்பு நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா திவ்யா ஸ்பந்தனா. இதனை தொடர்ந்து தனுஷின் பொல்லாதவன், சூர்யாவின் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த ரம்யா, தமிழில் 12 ஆண்டுகளாக வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினராக இருந்து வந்தம் ரம்யாவுக்கு 40 வயதாகி திருமணம் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் 40 வயதில், ,இன்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள செய்தி இந்திய சினிமாவையே அதிரவைத்துள்ளது.
தற்போது 40 வயதான நடிகை திவ்யா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில், இந்த செய்திக்கு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கே.டி. லட்சுமி காந்தன் மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், திவ்யா ஸ்பந்தனா நன்றாக இருப்பதாகவும் அவரை பற்றி பரவிய செய்திகள் 100 சதவீதம் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த செய்தி உண்மை இல்லை என்றும் அவரிடம் நான் தற்போது பேசினேன்.அவர் நன்றாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் என்று பிரபல செய்தியாளர் சித்ரா தெரிவித்திருக்கிறார். தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை திவ்யா, விரைல் நம்ம ஊரில் சந்திப்போம் என்று டிவிட்டர் பதிவில் டிவிட் பதிவிட்டுள்ளார்.
🤗🤗♥️♥️ See you in namma uru soon!
— Ramya/Divya Spandana (@divyaspandana) September 6, 2023