சூப்பர் ஸ்டார் மீது ஏற்பட்ட காதல்…! பெற்றோருக்கு தெரியாமல் ரஜினிகாந்த் வீட்டுக்கு போன 15 வயது சிறுமி…! ஆச்சர்யாத்தில் ரசிகர்கள்…!

சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு அவர்களின் நடிப்பின் மீது ஈர்ப்பால் தீவிர ரசிகர் ரசிகையாவது வழக்கம் தான்.நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்க அவர் போகும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் பட்டாளம் அலைகடலென திரண்டுவருவது அனைவரும் அறிந்ததே. படப்பிடிப்பு முடிந்து அவர் கோயில்களுக்கு செல்லும்போது, இசை வெளியீட்டு விழாவில், ஷூட்டிங் ஸ்பாட்களில் என்று எங்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் விடுவதில்லை. அப்படி ரஜினிகாந்த் மீது பல கோடி மக்கள் தீவிர ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பல ஆயிரம் ரசிகர்கள் ரஜினிகாந்தை காண வந்துள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய தீவிர ரசிகை ஒருவர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சேலத்தை சேர்ந்த 15 வயதுள்ள ஒரு சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் பள்ளி ஆசிரியரை பார்ப்பதாக கூறிவிட்டு சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். 15 சிறுமி ரஜினி விட்டில் இருப்பதை பார்த்த வீட்டுக்காவலாளி போலிசாருக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். உடனே இடத்திற்கு வந்த போலிசார் சிறுமியை மீட்டுள்ளனர்.

இதைக் கேட்ட காவலாளி, உடனே தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அந்த மாணவியை காவல்துறையினர் மீட்டு அவரது பெற்றோரிடம் கைப்பேசி மூலம் பேச வைத்தனர். பின்னர், அந்த சிறுமியை சென்னை அருகே பல்லாவரம் பம்மலில் வசிக்கும் அவர் பாட்டி வீட்டில் ஒப்படைத்தனர். மேலும் பெற்றோரை விட்டு பிரிந்து வரக் கூடாது என்றும் போலீஸாா் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *