சுற்றிலும் சிறுநீர் மழை…! தரையில் படுத்தபடி ரொமான்ஸ்…! வெளிப்படையாக கூறிய சினேகா…!

நடிகை சினேகா தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சினேகா அறிமுகம் ஆகி இருந்த காலம். இந்த படத்தில் படமாக்கப்பட்ட மறக்க முடியாத அனுபவம் குறித்து நடிகை சினேகா ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் பிரசாந்த் மற்றும் சினேகா ஆகிய இருவருமே அந்த பேட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்ட நடிகை சினேகா மறக்கவே முடியாத ஒரு அனுபவம் என ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒரு காட்சியில் ஆட்டு மந்தைகளுக்கு நடுவே இருவரும் தனியாக சந்தித்துக் கொண்டு

ரொமான்ஸ் செய்வது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. சுற்றிலும் ஆடுகள், மழை வேறு பெய்கிறது, ஆட்டு மந்தைக்குள் என்னையும் பிரசாந்தையும் அமர வைத்து விட்டார்கள்.அந்த காட்சி படமாக்கி முடிவதற்குள் நாங்கள் படாத பாடுபட்டு விட்டோம். இயற்கையாக ஆடுகளிடம் இருந்து வரக்கூடிய மனம் ஒரு பக்கம் இருக்க.. மறுபக்கம் சரியாக ரொமான்ஸ் காட்சிகளில் ஈடுபடும் போது… ஆடுகள் சுற்றி நின்று மழையோடு மழையாக டிரிப்பிங்ஸ் செய்யும்..

என்று சிரிக்கிறார் சினேகா.ட்ரிப்பிங்க்ஸ் என்றால் என்ன என்று எளிமையாக புரிந்து கொள்ளுங்கள். பொதுவாக ரொமான்ஸ் காட்சிகள் என்றால் நல்ல இடங்களில் படமாக்கப்படும். ஆனால், ஆட்டு மந்தைகளுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த பொழுது அதுதான் முதல் முறை இது என்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார் நடிகை சினேகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *