சில மானம்கெட்டவர்களால் மட்டுமே கீழ்த்தனமாக நடந்து கொள்ள முடியும்…! மதுரை முத்துவின் மனைவி நீதியின் ஆதங்கம்…!

மதுரை முத்து அவர்களின் மனைவி நீதி இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செயற்கை மருத்துவ கருத்தரிப்பு பிரிவில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார.நீதி தனது இன்ஸ்டால் பக்கத்தில் அடிக்கடி ஏதாவது வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கம் குறிப்பாக இவர் போடும் ரீல்ஸ் வீடியோ நல்ல வரவேற்பு பெற்று வந்தது. நீதியை ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் இன்ஸ்டாலில் பின் தொடர்கிறார்கள். உ லக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் மதுரை முத்து அவர்களின் மனைவி நீதி நான் அடிக்கடி ஏதாவது நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வீடியோ வெளியிடுவேன் ஆனால் அதனை கிண்டல் செய்தும் ஏதாவது கமெண்ட் செய்து போடுவார்கள்.

உங்களுக்கு வேலை இல்லையா என்று கேட்பார்கள் எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது அதனால் தான் மருத்துவமனையில் அமர்ந்து இதனைப் பற்றி பேசாமல் காரில் அமர்ந்து பேசுகிறேன். நிறைய FAKE ID அக்கவுண்டில் இருந்து மெசேஜ் அனுப்புகிறார்கள். சில மானங்கெட்டவர்களால் மட்டுமே கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடியும் என்று கூறிவிட்டு இந்த வீடியோவில் நான் கூற விரும்புவது தாய்ப்பாலின் அருமையை பற்றி வீடியோ பதிவிட்டு உள்ளார்.WORLD BREAST FEEDING முன்னிட்டு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் நீதி.

ஒரு பெண் குழந்தை பெற்ற பின் உருவத்தால் மாறுபடலாம் ஆனால் குழந்தைக்கு தாய்ப்பால் தான் சத்து தாய்ப்பாலை லிக்யூட் கோல்ட் என்பார்கள் அந்த அளவிற்கு தாய்ப்பாலுக்கு மதிப்பு அதிகம். தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்தால் குழந்தைக்கு சத்து கிடைக்காமல் போய்விடுமோ என்று சில நினைக்கலாம் ஆனால் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு சத்து கிடைக்குமே தவிர கெடுதல் என்றும் இல்லை. தனது ரத்தத்தை பாலாக கொடுக்க தாயால் மட்டுமே முடியும் என்று தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வு கொடுத்துள்ளார் டாக்டர் நீதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *